29.12.2025 அன்று இராஜபாளையம் அரசு கிளைநூலகத்தில் தாசில்தார் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 322-வது  மாத  இலக்கிய விழாவில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான சிறுகதை தொகுப்பு நூலாக சங்ககிரி சுமதிப்பிரியா அவர்கள் எழுதிய "பனைமரக்காடு" தேர்வுசெய்யப்பட்டதை முனைவர்  க.அழகர் பாராட்டி வாழ்த்தி பேசினார். சுமதிப்பிரிய அவர்களுக்கு பெருந்தன்மை கல்விமேம்பாட்டு அறக்கட்டளை "மு.வரதராசனார் விருது" வழங்கியதை அறிவித்தார்கள். 

நூலகர் சண்முகவேல் வரவேற்புரையும், நூலகர் சங்கரியம்மாள் நன்றியுரையும்  கூறினார்கள்.