Skip to main content

எம்மை பற்றி

 பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு  அறக்கட்டளை 17.07.2024 அன்று தொடங்கப்பட்டது. இதன் தலைவராக க.அழகர், செயலாளர் ப.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டனர். அறக்கட்டளை தொடங்கிய பிறகு பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறோம் அவற்றில் சில செயல்பாடுகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.


அறக்கட்டளையின் செயல்பாடுகள்:

1. தமிழ் அறிஞர்களை உருவாக்குதல் 

2. தமிழ் மொழி உணர்வினை வளர்ப்பது 

3. கல்வியறிவு அற்றவர்களுக்கு எழுத்தறிவு பயிற்றல் 

4. எழுத்தர்களையும், சிற்றிதழ்களையும் ஊக்குவித்தல் 

5. அரசு கிளை நூலகத்தில் சிறுகதை,கவிதை,கட்டுரை,பேச்சாற்றல் பயிற்சி வகுப்புகள் 

6. மாணவர்களின் திறனறிவை ஊக்குவிக்க சன்மானம்,பாராட்டு சான்றிதழ் வழங்குதல் 

7. ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் 

8. கல்விதொடர்பான கருத்தரங்கம்,ஆய்வரங்கம் மாநாடு நடத்துதல் 

9. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துதல் 

10. ஆதரவற்ற முதியோர்களை பாதுகாத்தல் 

Popular posts from this blog

பஞ்சாயத்து பள்ளியை மேம்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டு விழா

  முகவூர் பஞ்சாயத்து பள்ளியின் கட்டிடங்களை மேம்படுத்த கடினமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செய்து அதற்காக அரும்பாடுபட்டு அரசின் துணை கொண்டு மேம்படுத்திய திரு.அண்ணாதுரை அவர்களை பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா 19.12.2024 அன்று நடத்தப்பட்டது. உடன் அறக்கட்டளை தலைவர்.திரு.க.அழகர், பொருளாளர் திரு.காளீஸ்வரன், சிந்தனை தமிழன் ஆசிரியர் திரு.சிவகுமார் மற்றும் மேனாள் துணை ஆட்சியர் திரு.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்..

58-வது தேசிய நூலக வார விழா : தினகரன் செய்தி குறிப்பு (மதுரை)

 தினகரன் செய்தி குறிப்பு (மதுரை| 22.11.2025)  ராஜபாளையம் பழைய ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அரசு சார்பில் நடத்தப் படும் முழுநேர நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. முன்னாள் துணை ஆட்சியர். ஆதிநாராயணன் தலைமை வகித்தார், நூலகர் சண்முக வேல் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் அழகர், செயலாளர் சிவகுமார், பொருளாளர் காளீஸ்வரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்னம்பலம், பொன்ராஜ், ரகுபதி சிறப்புரை ஆற்றினர். நூலகத்தின் புரவலராக ஆசிரியர் செல்வராஜ் ரூ.1000 செலுத்தினார். தொடர்ந்து வாழ்வை உயர்த்தும் நூலகம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் மாணவர் விக்னேஷ் முதல் பரிசு, சான்றிதழ், நவில்தோறும் நூலகம் என்ற கவிதை போட்டியில் செந்தில் நாராயணன் முதல் பரிசு, சான்றிதழ்,பாலசரவணன் இரண்டாம் பரிசு. சான்றிதழ் பெற்று கொண்டனர். இதில் நூலகர்கள் ராஜகுரு, குருநாதன், சரஸ்வதி, முத்துலட்சுமி, சந்திரகலா, ரங்கா தேவி, மைதிவான் பிவி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சங்கரி அம்மாள் நன்றி கூறினார்.

திறனறிவு பயிற்சி வகுப்பு

  21.11.2024 அன்று சாலியர் விநாயகர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு, பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக  திறனறிவு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் க.அழகர், செயலாளர் புலவர்.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் கலந்துகொண்டனர்.