இராஜபாளையம், ஆக.14:
பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முச்சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்வு மடத்துப்பட்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தாசில்தார் பாலகிருஷ்ணன் அவர்கள் முச்சக்கர வண்டியை கொடையாக வாங்கி, பயனாளியின் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார். இந்த வண்டியை திருமலை குமார் மகன் மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிந்தனை தமிழன் ஆசிரியர் சிவகுமார், பகிர்வு அறக்கட்டளையைச் சேர்ந்த செல்வகுமார், எலக்ட்ரீசியன் சஞ்சீவி குமார்ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments