தினகரன் செய்தி குறிப்பு (மதுரை| 22.11.2025) ராஜபாளையம் பழைய ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அரசு சார்பில் நடத்தப் படும் முழுநேர நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. முன்னாள் துணை ஆட்சியர். ஆதிநாராயணன் தலைமை வகித்தார், நூலகர் சண்முக வேல் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் அழகர், செயலாளர் சிவகுமார், பொருளாளர் காளீஸ்வரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்னம்பலம், பொன்ராஜ், ரகுபதி சிறப்புரை ஆற்றினர். நூலகத்தின் புரவலராக ஆசிரியர் செல்வராஜ் ரூ.1000 செலுத்தினார். தொடர்ந்து வாழ்வை உயர்த்தும் நூலகம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் மாணவர் விக்னேஷ் முதல் பரிசு, சான்றிதழ், நவில்தோறும் நூலகம் என்ற கவிதை போட்டியில் செந்தில் நாராயணன் முதல் பரிசு, சான்றிதழ்,பாலசரவணன் இரண்டாம் பரிசு. சான்றிதழ் பெற்று கொண்டனர். இதில் நூலகர்கள் ராஜகுரு, குருநாதன், சரஸ்வதி, முத்துலட்சுமி, சந்திரகலா, ரங்கா தேவி, மைதிவான் பிவி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சங்கரி அம்மாள் நன்றி கூறினார்.
29.11.2025 அன்று இராஜபாளையம் பொதுநூலகத்தில் வைத்து பெருந்தன்மை கல்விமேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் இராஜபாளையம் வாசகர் வட்டம் நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது.அதில் ராஜபாளையம் குழந்தைகள் நூலகத்தின் நூலகர் திருமதி.முத்துலட்சுமி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த வாசகர் வட்ட அமைப்பிற்கான விருதும் , கிருஷ்ணாபுரம் கிளை நூலகத்தின் நூலகர் திருமதி.அனிதா அவர்களுக்கு தமிழ்நாடுஅரசு நல்நூலகர் விருதும் பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட நூலக ஆய்வாளர் மலர்வேந்தன் தலைமைவகித்தார். வாசகர் வட்ட தலைவர் முனைவர் க.அழகர் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட நூல் இருப்பு சரி பார்ப்பு அலுவலர் கிரகாம் துறை வாழ்த்துறை வழங்கினார். சிந்தனை தமிழன் ஆசிரியர் சிறப்புரையாற்றினார். நகராட்சி ஆதரவற்றோர் பொறுப்பாளர் இரா.காளீஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். நூலகர் சண்முகவேல் அனைவைரையும் வரவேற்றார். நூலகர் சங்கரியம்மாள் நன்றியுரை கூறினார்.விழாவில் ராஜபாளையம் வட்ட கிளை நூலக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புச்செய்தனர்.