முகவூர் பஞ்சாயத்து பள்ளியின் கட்டிடங்களை மேம்படுத்த கடினமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செய்து அதற்காக அரும்பாடுபட்டு அரசின் துணை கொண்டு மேம்படுத்திய திரு.அண்ணாதுரை அவர்களை பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா 19.12.2024 அன்று நடத்தப்பட்டது. உடன் அறக்கட்டளை தலைவர்.திரு.க.அழகர், பொருளாளர் திரு.காளீஸ்வரன், சிந்தனை தமிழன் ஆசிரியர் திரு.சிவகுமார் மற்றும் மேனாள் துணை ஆட்சியர் திரு.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்..
  24.09.2025  அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை  சார்பாக TNPSC,TET,UPSC,Railway போன்ற தேர்வுகளுக்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு, இராஜபாளையம் அரசு பொதுநூலகத்தில்  (பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம்) முனைவர்.பி.கோபால் (டி மாரியப்பன் நாடார் முத்துக்கனி  அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முதல்வர்) மாணவர்களுக்கு ஒருநாள் இலவச  சிறப்பு பயிற்சி பட்டறை  நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி முடிவில் தேனீர் விருந்துடன் நிறைவு பெற்றது.