Skip to main content

அஞ்சல் கிராம சபைக் கூட்டம்

 


07.10.2025 அன்று  அஞ்சல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரவேற்புரை P.கதிரவன் (cash over seer) co நிகழ்த்தினார், நிகழ்ச்சிக்கு பி.பிரேமா போஸ்ட் மாஸ்டர் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் ப.சிவகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்புத் திட்டம், காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

மேலும், பொதுமக்களுக்கு சேமிப்புக் கணக்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு தபால் சேமிப்புக் கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், தபால் ஆயுள் காப்பீடு, ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல் போன்ற நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் தலைமை போஸ்ட் மாஸ்டர் D.செல்வராஜ் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காளி சரண்யா (கரெஸ்பாண்டெண்ட் கிளெர்க் ).

Comments

Popular posts from this blog

திறனறிவு பயிற்சி வகுப்பு

  21.11.2024 அன்று சாலியர் விநாயகர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு, பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக  திறனறிவு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் க.அழகர், செயலாளர் புலவர்.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் கலந்துகொண்டனர்.

பஞ்சாயத்து பள்ளியை மேம்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டு விழா

  முகவூர் பஞ்சாயத்து பள்ளியின் கட்டிடங்களை மேம்படுத்த கடினமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செய்து அதற்காக அரும்பாடுபட்டு அரசின் துணை கொண்டு மேம்படுத்திய திரு.அண்ணாதுரை அவர்களை பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா 19.12.2024 அன்று நடத்தப்பட்டது. உடன் அறக்கட்டளை தலைவர்.திரு.க.அழகர், பொருளாளர் திரு.காளீஸ்வரன், சிந்தனை தமிழன் ஆசிரியர் திரு.சிவகுமார் மற்றும் மேனாள் துணை ஆட்சியர் திரு.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்..